திருகோணமலையில் இன்று மாலை வாள் வெட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
திருகோணமலை 3 ஆம் கட்டைப்பகுதியில் அமைந்துள்ள பலசரக்குக்கடையொன்றிற்கு அருகாமையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் கிரி என்ற நபர் காயத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும், அத்துடன் சிவகரன் என்பவர் தாக்குதலை மேற்கொண்ட விட்டு தப்பித்து சென்று உள்ளதாகவும் அறிய முடிகின்றது.
குறித்த நபர் நீல நிற முச்சக்கரவண்டியில் வந்திருந்ததாகவும் நேற்று இரவு குடி போதையில் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டின் தொடர்ச்சியே இவ் வாள் வெட்டுச் சம்பவத்திற்கு காரணம் என தெரியவருகிறது.
No comments:
Post a Comment