முல்லைத்தீவு கடற்கரையில் பாரிய மாற்றம் - அச்சத்தில் மக்கள்.!!! - ColorsTamil.COM .videoyoutube{text-align:center;margin:auto;width:100%;} .video-responsive{position:relative;padding-bottom:56.25%;height:0;overflow:hidden;} .video-responsive iframe{position:absolute;top:0;left:0;width:100%;height:100%;border:0}

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, August 20, 2019

முல்லைத்தீவு கடற்கரையில் பாரிய மாற்றம் - அச்சத்தில் மக்கள்.!!!

முல்லைத்தீவு கடற்கரையில் பாரிய மாற்றம் - அச்சத்தில் மக்கள்.!!!


முல்லைத்தீவு நாயாற்றில் இருந்து கொக்கிளாய் வரையிலான கடற்கரையில் நேற்று பிற்பகல் முதல் கடுமையான மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அந்தப் பகுதி கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடல் நீர் கறுப்பு நிறத்தில் காணப்பட்டுள்ள நிலையில், கரைக்கு அலை வந்து சென்றதன் பின்னர் கடற்கரையில் கறுப்பு நிறத்தில் தார் போன்று கரையில் படிந்து காணப்படுகின்றது.

தார் போன்ற மர்ம பொருள் மீண்டும் அலையில் சிக்கி கடலுக்கு செல்லாமல் கரையிலேயே காணப்படுவதாக கடற்றொழிலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கறுப்பு நிறத்திலான இந்த திரவம் பாதங்களில் சேருகின்றபோது அவற்றை நீக்குவது சிரமமாக உள்ளதோடு அவை கடுமையான துர்நாற்றம் வீசுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

கடந்த வருடம் ஒகஸ்ட் மாதம் முல்லைத்தீவு கடல் நீர் மட்டம் 5 அடி உயர்வடைந்த நிலையில் சுனாமி அச்சம் ஏற்பட்டிருந்தது. இதன் காரணமாக அந்த பகுதியிலிருந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டனர்.

மேலும் இது தொடர்பில் கொழும்பில் இருந்து சென்ற விஞ்ஞானிகள் மற்றும் uகடல் ஆய்வாளர்கள், கடலில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், இது சுனாமி ஆபத்தை ஏற்படுத்தாது எனவும் தெரிவித்துள்ளனர்.



No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here