சமுதாயஞ்சார் சீர்திருத்தத் திணைக்கள வட மாகாண உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வு சாவகச்சேரி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்றைய (19) தினம் இடம்பெற்றது.
இலங்கை சிறைச்சாலைகள் ஐக்கிய நிறுவனத்தின் அனுசரணையுடன் இச் செயலமர்வு இடம்பெற்றது.
தென்மராட்சி பிரதேச சமுதாயஞ் சார் சீர்திருத்த அபிவிருத்தி உத்தியோகத்தர் க.ரஜனிகாந்தன் தலைமையில் இந் நிகழ்வு இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் இலங்கை சிறைச்சாலைகள் ஐக்கிய நிறுவனத்தின் தேசிய இயக்குநர் சிவராஐசிங்கம் ஜெயராஜ், சிரேஷ்ட சமுதாயஞ் சார் சீர்திருத்த உத்தியோகத்தர் எம்.ஏ.எம்.அனஸ், வளவாளர் விக்கிரமன் பிரான்சிஸ், இலங்கை சிறைச்சாலைகள் ஐக்கிய நிறுவனத்தின் வடமாகாண இணைப்பாளர் வினித்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment