சுவிஸ் நாட்டில் உள்ள ஈழ விழுதுகள் அறக்கட்டளையின் எற்பாட்டில் போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் காணப்படும் முன்பள்ளி மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு புளியம்பொக்கனையில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் நாகேந்திரா முன்பள்ளி ,முரசுமோட்டை அபிராமி முன்பள்ளி ஆகியவற்றுக்கு 35,000.00ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இன் நிகழ்விற்கு ஓய்வு நிலை அதிபர் க.தேவேந்திரன் கலந்து சிறப்பித்ததுடன் கற்றல் உபகரணங்களை முன்பள்ளி பொறுப்பாசிரியர்களிடம் கையளித்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment