சிறுமியொருவரை துஷ்பிரயோகத்திற்குட்படுத்தி மூன்று மாதம் கர்ப்பிணியாக்கிய 23 வயதுடைய சந்தேக நபர் இம்மாதம் 27 ஆம் திகதி வரை விளக்கமறியல்.!!! - ColorsTamil.COM .videoyoutube{text-align:center;margin:auto;width:100%;} .video-responsive{position:relative;padding-bottom:56.25%;height:0;overflow:hidden;} .video-responsive iframe{position:absolute;top:0;left:0;width:100%;height:100%;border:0}

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, August 20, 2019

சிறுமியொருவரை துஷ்பிரயோகத்திற்குட்படுத்தி மூன்று மாதம் கர்ப்பிணியாக்கிய 23 வயதுடைய சந்தேக நபர் இம்மாதம் 27 ஆம் திகதி வரை விளக்கமறியல்.!!!

சிறுமியொருவரை துஷ்பிரயோகத்திற்குட்படுத்தி மூன்று மாதம் கர்ப்பிணியாக்கிய 23 வயதுடைய சந்தேக நபர் இம்மாதம் 27 ஆம் திகதி வரை விளக்கமறியல்.!!!




திருகோணமலை சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 13 வயதுடைய சிறுமியொருவரை துஷ்பிரயோகத்திற்குட்படுத்தி மூன்று மாதம் கர்ப்பிணியாக்கிய 23 வயதுடைய சந்தேக நபரை இம்மாதம் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம்.சம்சுதீன் இன்று (20) உத்தரவிட்டார்.

ஈச்சிலம்பற்று, வெருகல் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் குறித்த சிறுமியை காதலித்து திருமணம் செய்துள்ளதாகவும் சேருநுவர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சிறுமியின் தாய் வெளிநாடு சென்றுள்ளதாகவும் தந்தையின் பராமரிப்பிலே குறித்த சிறுமி இருந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சிறுமி மூன்று மாதம் கர்ப்பிணியாக இருப்பதாகவும், சேருநுவர பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேக நபரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபரை பொலிஸார் மூதூர் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

சிறுமி மூதூர் வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here