23.08.2019 இன்றைய நாள் எப்படி.!!! - ColorsTamil.COM .videoyoutube{text-align:center;margin:auto;width:100%;} .video-responsive{position:relative;padding-bottom:56.25%;height:0;overflow:hidden;} .video-responsive iframe{position:absolute;top:0;left:0;width:100%;height:100%;border:0}

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, August 22, 2019

23.08.2019 இன்றைய நாள் எப்படி.!!!

23.08.2019 இன்றைய நாள் எப்படி.!!!


மேஷம்:
சகோதர வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதால் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். இன்றைக்கு வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு உண்டு.

ரிஷபம்:
புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். கோர்ட் வழக்கில் சாதகமான முடிவு ஏற்படும். சிலருக்கு பணப் பற்றாக்குறை ஏற்படவும் அதனால் கடன் வாங்கவும் நேரும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படக் கூடும்.

மிதுனம்:
எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும். உறவினர்கள் வருகை மனதுக்கு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். வாழ்க்கைத் துணை வழி உறவுகளால் அனுகூலம் உண்டாகும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வகையில் நன்மைகள் ஏற்படக்கூடும்.

கடகம்:
கடக ராசிக்கு இன்றைய ராசி பலன் படி புதிய ஆடை ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். மனம் உற்சாகமாகக் காணப்படும். பிற்பகலுக்கு மேல் புதிய முடிவுகள் எதுவும் எடுக்காமல் வழக்கமான வேலைகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். மனம் உற்சாகமாகக் காணப்படும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.

சிம்மம்:
புதிய முயற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். புதியவர்களின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் உண்டாகும். வராது என்று நினைத்திருந்த கடன் தொகை திரும்பக் கிடைக்கும். மகம் நட்சத்திரத்தில் புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும்.

கன்னி:
சிலருக்கு எதிர்பாராத பொருள் வரவுக்கு வாய்ப்பு உண்டு. புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். மாலையில் உறவினர்கள் வகையில் சிறு மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமையாக இருக்கவும். வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவுகளால் நன்மை ஏற்படும்.

துலாம்:
முயற்சிகள் வெற்றி அடையும். அரசு சம்மந்தமான வேலைகள் எளிதில் முடியும் வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சி கிடைக்கும். கோபத்துடன் பேசுவதைத் தவிர்ப்பது நல்லது. சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

விருச்சிகம்:
வெளிநாடுகளில் இருந்து நல்ல செய்தி வந்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். பிற்பகலுக்குமேல் காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். புதிய முயற்சிகளை காலையிலேயே மேற்கொள்வது நல்லது. பிற்பகலுக்குமேல் எதிர்பாராத சிலரை சந்திக்க நேரிடுவதும், அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத தனலாபம் கிடைக்கும்.

தனுசு:
அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரித்தாலும் சக பணியாளர்களின் ஒத்துழைப்புடன் எளிதாக முடிப்பீர்கள். அலுவலகத்தில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பிற்பகலுக்கு மேல் சோர்வு நீங்கி உற்சாகம் பிறக்கும். வாழ்க்கைத்துணை வழியில் பண உதவி கிட்டும். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புண்ணிய தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.

மகரம்:
பிற்பகலுக்குமேல் தாய் வழி உறவினர்களின் ஆதரவும் உதவியும் கிடைக்கும். உங்கள் தேவை அறிந்து மற்றவர்கள் உங்களுக்கு உதவுவார்கள். இன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக இருக்கும். மாலை நேரத்தில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வருகையினால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

கும்பம்:
வெளியூர்களில் இருந்து எதிர்பாராத தகவல்கள் வரும். நினைத்த காரியங்கள் அனுகூலமாக முடியும். நீண்டகாலமாகச் சந்திக்காமல் இருந்த பழைய நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். நல்லவர்களின் அறிமுகம் கிடைக்கும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் காரிய அனுகூலம் ஏற்படும்.

மீனம்:
சிறு சிறு விபத்துகள் ஏற்படக்கூடும் என்பதால் வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. அனுபவபூர்வமான பேச்சால் மற்றவர்களுக்கு ஆறுதல் தருவீர்கள். நினைத்த காரியங்கள் அனுகூலமாக முடியும். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு காரியங்களில் தடைகள் ஏற்படும்.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here