கொழும்பு மவுண்ட் லவனியா, சென்ட் சில்வெஸ்டர் வீதி அருகே இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் குத்திற்கு இலக்காகி பலியாகியுள்ளார்.
குறித்த நபர் கத்திக்குத்திற்கு இலக்காகிய நிலையில் களுபோவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் பலியானவர் இரத்மலனவில் வசிக்கும் 34 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment