மகளை பாலியல் துஸ்பிரயோகத்திற்குட்படுத்த முயற்சித்த மருமகன் மீது மிளகாய்த்தூள் வீசி மகளைக் காப்பாற்றிய சம்பவம் ஒன்று வவுனியாவில் இடம்பெற்றுள்ளது.!!! - ColorsTamil.COM .videoyoutube{text-align:center;margin:auto;width:100%;} .video-responsive{position:relative;padding-bottom:56.25%;height:0;overflow:hidden;} .video-responsive iframe{position:absolute;top:0;left:0;width:100%;height:100%;border:0}

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, September 4, 2019

மகளை பாலியல் துஸ்பிரயோகத்திற்குட்படுத்த முயற்சித்த மருமகன் மீது மிளகாய்த்தூள் வீசி மகளைக் காப்பாற்றிய சம்பவம் ஒன்று வவுனியாவில் இடம்பெற்றுள்ளது.!!!

மகளை பாலியல் துஸ்பிரயோகத்திற்குட்படுத்த முயற்சித்த மருமகன் மீது மிளகாய்த்தூள் வீசி மகளைக் காப்பாற்றிய சம்பவம் ஒன்று வவுனியாவில் இடம்பெற்றுள்ளது.!!!

வவுனியாவில் இன்று அதிகாலை தனது மூத்த மகளின் கணவன், இளைய மகளான 25 வயதுடைய யுவதியை பாலியல் துஸ்பிரயோகத்திற்குட்படுத்த முயற்சித்த போது மருமகன் மீது மிளகாய்த்தூள் வீசி மகளைக் காப்பாற்றிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இன்று (04) அதிகாலை 1 மணியளவில் குறித்த நபர் மதுபோதையில்  சாந்தசோலையில் உள்ள தனது மாமனாரின் வீட்டிற்குள் அத்து மீறி உள் நுழைந்து மாமியார் மீது தலைக்கவசத்தினால் தாக்குதல் நடத்தியுள்ளார்.

இத் தாக்குதலை  தடுத்த இளைய மகள் மீதும் தாக்குதல் நடத்தியதுடன், தடுக்கச் சென்ற மாமனாரின் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளார்.

இளைய மகளை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்து அப் பெண் அணிந்திருந்த  ஆடைகளை கிழித்தும் நகத்தால் கீறல்களை ஏற்படுத்தியும் உள்ளார்.

இச் சம்பவத்தை தடுக்க மாமனார் சமையலறையில் வைக்கப்பட்டிருந்த மிளகாய்த் தூளை மருமகனின் முகத்தில் வீசியுள்ளார்.

கண்ணில் பட்ட மிளகாய்த்தூளின் எரிச்சல் தாங்கமுடியாமல் மருமகன் வீட்டிற்குள்ளிருந்து வெளியேற முற்பட்டபோது அயவலர்கள் சிலரும் மருமகன் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

கீறித்த குடும்பத்தினர் பொலிசாருக்கு தகவல் வழங்க முற்பட்டவேளை அருகிலுள்ள காணியில் ஒளித்து கொண்டார் மருமகன். இன்று காலை தலையில் காயமடைந்த மருகன் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று (04) அதிகாலை 1.30மணியளவில் பொலிசாரின் அவசர 119 அழைப்பிற்கு இச் சம்பவம் தொடர்பில் தகவல் வழங்கியதன் பின்னர் வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்திற்கு அயலவர்கள் முறைப்பாட்டினை மேற்க்கொண்டதற்கு அமைவாக பொலிஸார் மேலதிக விசாரணை களை மேற்க்கொண்டுவருகின்றர்.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here