யாழில் சிறுமியை கர்ப்பமாக்கிய முதியவர்.!!! - ColorsTamil.COM .videoyoutube{text-align:center;margin:auto;width:100%;} .video-responsive{position:relative;padding-bottom:56.25%;height:0;overflow:hidden;} .video-responsive iframe{position:absolute;top:0;left:0;width:100%;height:100%;border:0}

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, October 3, 2019

யாழில் சிறுமியை கர்ப்பமாக்கிய முதியவர்.!!!

யாழில் சிறுமியை கர்ப்பமாக்கிய முதியவர்.!!!

யாழ்ப்பாண மானிப்பாயில் 14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 62 வயது முதியவர் மானிப்பாய் பொலிஸாரால்ல் கைது செய்யப்பட்டுள்ளார்.

முத்துதம்பி வீதி மானிப்பாய் பகுதியில் வசிக்கும் 62 வயதுடைய நாகலிங்கம் யோகராசா என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது -
குறித்த நபரின் நண்பனின் மகளான 14 வயது சிறுமிக்கு இனிப்பு வகைகளை பெற்றுக்கொடுத்து சிறுமியை தனது இச்சைக்கு பயன்படுத்தி வந்துள்ளார் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சுகயீனம் அடைந்திருந்த குறித்த சிறுமி வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டிருந்தபோது சிறுமி கர்ப்பமடைந்துள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டது.

இதன் பின்னர் சிறுமியிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போது சிறுமி இடம் பெற்ற சம்பவத்தை கூறியுள்ளார். சிறுமியின் வாக்கு மூலத்தின் பிரகாரம் துஸ்பிரயோகம் செய்த நபரை மானிப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்த நபரை நாளை (04) மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here