கிளிநொச்சி பரந்தன், குமரபுரம் பகுதியில் உருக்குலைந்த நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்பு.!!! - ColorsTamil.COM .videoyoutube{text-align:center;margin:auto;width:100%;} .video-responsive{position:relative;padding-bottom:56.25%;height:0;overflow:hidden;} .video-responsive iframe{position:absolute;top:0;left:0;width:100%;height:100%;border:0}

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, October 4, 2019

கிளிநொச்சி பரந்தன், குமரபுரம் பகுதியில் உருக்குலைந்த நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்பு.!!!

கிளிநொச்சி பரந்தன், குமரபுரம் பகுதியில் உருக்குலைந்த நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்பு.!!!

கிளிநொச்சி பரந்தன், குமரபுரம் பகுதியில் உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் உள்ள பூட்டப்பட்ட வீடு ஒன்றிலிருந்தே  சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது -
குறித்த சம்பவத்தில் காணப்பட்ட சடலம் 29 வயதான நிதர்சன்  என அடையாளம் காணப்பட்டுள்ளது. ஒரு பிள்ளையின் தந்தையான நிதர்சன் குடும்பத்தில் ஏற்பட்ட பிணக்கு காரணமாக தனிமையில் வாழ்ந்து வந்துள்ளார்.

குறித்த நபர் 5 நாட்களாக தொடர்ச்சியாக  தொடர்பில்லாத நிலையில், உறவினர்கள் குறித்த வீட்டிற்கு சென்று பார்வையிட்ட போது, வீடு பூட்டப்பட்ட  நிலையில் நிதர்சனது உடலம் துர்நாற்றம் வீசியுள்ளது.

இச் சம்பவத்தை பொலிஸாரிற்கு தகவல் வழங்கியதனடிப்படையில்  உயிரிழந்தவரின் சடலத்தினை பொலிசார் மீட்டுள்ளனர்.

இவ் மரணம்  தொடர்பில் பல்வேறு கோணங்களில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில் சடலம் மருத்துவ பரிசோதனையின் பின்னர் குடும்பத்தினரிடம் சடலம் ஒப்படைக்கப்படும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here