விடுதியின் குளியலறையில் நேற்று முன்தினம் அதிகாலை குழந்தை ஒன்றை பிரசவித்துள்ள கொழும்பை அண்மித்த பிரதேசம் ஒன்றில் அமைந்துள்ள தொழில்நுட்ப தொழிற்பயிற்சி கல்லூரியொன்றின் விடுதியில் தங்கியிருந்த மாணவி.!!!
கொழும்பை அண்மித்த பிரதேசம் ஒன்றில் அமைந்துள்ள தொழில்நுட்ப தொழிற்பயிற்சி கல்லூரியொன்றின் விடுதியில் தங்கியிருந்த மாணவி ஒருவர் குறித்த விடுதியின் குளியலறையில் நேற்று முன்தினம் அதிகாலை குழந்தை ஒன்றை பிரசவித்துள்ளதாக கல்கிஸை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிறந்த குழந்தை உயிரிழந்துள்ள நிலையில் காணப்படுவதுடன் மாணவி சிகிச்சைகளுக்காக களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த மாணவி உணவு உற்பத்தி தொழிநுட்பவியல் பாடநெறி ஒன்றை கற்றுவந்த 20 வயதான மாணவி என அறிய முடிகின்றது.
இது தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளிலிருந்து
தெரியவருவதாவது -
கடந்த ஜூன் மாத நடுப்பகுதியில் குறித்த கல்லூரியில் இணைந்துகொண்ட இம்மாணவி அங்கிருந்த மேலும் 3 மாணவிகளுடன் விடுதியில் தங்கி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சொந்த ஊரான மிஹிந்தலைக்கு சென்றிருந்த இம்மாணவி கடந்த 18 ஆம் திகதி மாலை மீண்டும் விடுதிக்கு திரும்பி எவ்வித மாற்றத்தையும் காட்டிக்கொள்ளாமல் சக மாணவிகளுடன் பேசியதுமட்டுமல்லாது வீட்டிலிருந்து தான் எடுத்து வந்த உணவுபொருட்களை பகிர்ந்து உண்ட போதிலும் அவர் இரவு உணவை புறக்கணித்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் தெரியவருவதாவது -
சம்பவ தினம் இரவு 11 மணியளவில் கடும் வயிற்று வலியினால் அவர் அவதிப்பட்டவேளை சக மாணவி ஒருவர் அவருக்கு வலி நிவாரண வில்லைகளை கொடுத்ததுடன் சில சிகிச்சை முறைகளை கையாண்டுள்ளார்.
இருந்தும் வலி மேலும் அதிகரித்தமையினால் ஏனைய மாணவிகளும் இது குறித்து விடுதி நிர்வாகிக்கு தெரியப்படுத்த முயன்றபோது குறித்த மாணவி குளியலறைக்குள் சென்று கதவடைத்துக் கொண்டு சுமார் 1 மணித்தியாலத்துக்கும் அதிகநேரம் உள்ளேயே இருந்துள்ளார்.
அதன் பின்பு ஏனைய மாணவிகளிடமிருந்து துணியொன்றை பெற்ற மாணவி சிறிது நேரம் கழித்து குறித்த துணியில் குழந்தை ஒன்றை சுற்றிக் கொண்டு வெளியேறியுள்ளார்.
இதனால் பதற்ற மடைந்த மாணவிகள் மீண்டும் விடுதி நிர்வாகிக்கு தெரியப்படுத்த முயன்றுள்ளனர்.
எனினும் இந்த விடயத்தை எவருக்கும் தெரிவிக்க வேண்டாம் எனவும் விடிந்தவுடன் தான் ஊருக்கு செல்வதாகவும் குறித்த மாணவி கூறியுள்ளார்.
சிறிது நேரத்தின் பின்னர் அவ்விடத்துக்கு வந்த விடுதி நிர்வாகி அங்கு தங்கியிருந்த விரிவுரையாளர் ஒருவரை அழைத்து குறித்த மாணவியை வைத்திசாலையில் அனுமதித்ததுடன் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கும் தகவல் வழங்கியுள்ளார்.
அதே சமயம் மாணவியின் கையிலிருந்த குழந்தை உயிரிழந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இம் மாணவி மிஹிந்தலையில் ஒருவருடன் காதல் தொடர்புகளை கொண்டிருந்ததாகவும், அதனால் அவர் கர்ப்பமாகியிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில், கல்கிஸை வலயத்துக்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் முதித புஸ்ஸெல்ல, உதவி பொலிஸ் அத்தியட்சகர் சமன் ஜயசேகர ஆகியோரின் அறிவுறுத்தலுக்கமைய, கல்கிஸை பொலிஸ் நிலைய குற்ற விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post Top Ad
Responsive Ads Here
Friday, August 23, 2019
Home
Unlabelled
விடுதியின் குளியலறையில் நேற்று முன்தினம் அதிகாலை குழந்தை ஒன்றை பிரசவித்துள்ள கொழும்பை அண்மித்த பிரதேசம் ஒன்றில் அமைந்துள்ள தொழில்நுட்ப தொழிற்பயிற்சி கல்லூரியொன்றின் விடுதியில் தங்கியிருந்த மாணவி.!!!
விடுதியின் குளியலறையில் நேற்று முன்தினம் அதிகாலை குழந்தை ஒன்றை பிரசவித்துள்ள கொழும்பை அண்மித்த பிரதேசம் ஒன்றில் அமைந்துள்ள தொழில்நுட்ப தொழிற்பயிற்சி கல்லூரியொன்றின் விடுதியில் தங்கியிருந்த மாணவி.!!!
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates which are professionally designed and perfectlly seo optimized to deliver best result for your blog.
No comments:
Post a Comment